×

கனமழையிலும் சபரிமலையில் குவிந்த பக்தர்கள்


திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளி முதல் ஞாயிறு வரை வார கடைசி நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த வாரமும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தநிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு சபரிமலையில் பலத்த மழை பெய்தது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழை கோட்டுகளையும், பிளாஸ்டிக் கவர்களையும் அணிந்தபடி தரிசனத்திற்கு சென்றனர்.

நேற்று இரவு வரை சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று திங்கட்கிழமை என்ற போதிலும் அதிகாலையிலேயே சன்னிதானத்தில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இன்று 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post கனமழையிலும் சபரிமலையில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimalai Ayyappan Temple ,
× RELATED சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி முன்பதிவு ரத்து